NALLA PANGU SONG LYRICS IN TAMIL
என் நினைவுகள் இன்று அழிந்தாலும்
நினைவிருக்கும் உம் பிரசன்னமே 2
என் போகையிலும் வருகையிலும் என் துணையாயிருக்கிறீர் நான் சோர்ந்தாலும் மனம் தளர்ந்தாலும் உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் -2 பிரசன்னராய் கூட இருப்பவரே அற்புதராய் கூட வருபவரே என்னை விட்டு எடுபடாத நல்லப் பங்கே - 2 என் உறவுகள் இன்றென்னை மறந்தாலும் நிரந்தரமே உம் பிரசன்னமே நான் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் என் துணையாயிருக்கிறீர் என் தனிமையிலும் என் வெறுமையிலும் உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர்-2 எனக்குள் இருப்பவர் மிகவும் பெரியவர் என் பட்சமாய் இருப்பவர் உலகத்தை ஜெயித்தவர் என் நடுவினில் இருப்பவர் சர்வ வல்லவர் எனக்காய் இருப்பவர் அவர் நம்பத்தக்கவர்
Post a Comment